உள்நாட்டு செய்திகள்புதியவை

உயர்தர,புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை இடம்பெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி இடம்பெற உள்ளது.

இதன் காரணமாக கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் உடன் தொடர்புடைய வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் ஜூலை 30 ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஜூலை 31 க்கு பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க