உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

களு கங்கையின் நீரின் மட்டம் அதிகரிப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை

இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீரின் மட்டம் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க