உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பஹா பகுதிகளுக்கு 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 5 மணி வரையில் களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி, வத்தளை, பெஹலியாகொடை, கட்டுநாயக்க – சீதுவ மற்றும் ஜாஎல நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க