உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆழ்கடலில் 70 கிலோ ஹெரோயின் மீட்பு, 9 ஈரானியர்கள் கைது!

காலி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் பயணித்த படகில் இருந்து 106 கோடி ரூபா மதிப்புள்ள 70 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் அனுப்பிவைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

அப் படகில் இருந்து 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களான குறித்த ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளை கைதுசெய்ய இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிசாரின் உதவியை நாட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க