உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சமன் திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிப்பு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

சமன் திஸாநாயக்கவினால் அவன் கார்ட் வழக்கில் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அக்கோரிக்கையை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் கொழும்பு நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க