உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கிறேக்கிலி தோட்டம் – நடைப்பாதை திறந்து வைப்பு

தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளுக்கிணங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பத்தனை கிறேக்கிலி தோட்டத்தின் நடைப்பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத்தினால் (17.07.2019 ) இன்று பிரதேச மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் எம்.ஜெயகாந்த், முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம், பிரதேச வாசிகள் என பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க