உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சிற்றூர்ந்துடன் உந்துருளி மோதி விபத்து – இருவர் பலத்த காயம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

சிற்றூர்ந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில், உந்துருளியில் பயணித்த இருவரும் கடும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற உந்துருளி ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த சிற்றூர்ந்தும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து, உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க