உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெடிக்கவைக்கும் கருவிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

பிலியந்தல பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் டெட்டனேட்டர் கருவிகள் தொடர்பில் மற்றும் ஒரு சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலியந்தல – கெடிகம என்ற இடத்திலேயே 290 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கருவிகள் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற விடயம் தொடர்பில் எதுவும் தெரிய வரவில்லை.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு நேற்று மற்றுமொரு சந்தேகநபர் சரணடைந்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க