உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் இன்றுமுதல் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கென குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதி வரை இதன் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க