உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மாகாண சபை தேர்தல் – முதல் கட்ட பணிகளை தொடர்வதற்கு கோரிக்கை

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குரிய முதல் கட்ட பணிகளை செய்வதற்கான பணிப்புரையை விடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மகிந்த தேஷப்பரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஒன்றிற்காக முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கான பணிப்புரையை விடுப்பதற்க ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுவதாகவும் அதற்கமைவாகவே தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கையானனது தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க