உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மது போதையில் வாகனம் செலுத்திய 279 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 279 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

வாகன விபத்துக்களை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கட்டமாக மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கென நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க