உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆனமடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி

புத்தளம் – ஆனமடுவ வீதியின் கொட்டுக்கச்சிய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன், குறித்த இரு இளைஞர்களும் பயணித்த உந்துருளி பின்னால் சென்று மோதியதில் சம்பவம் இடம்பெறவுள்ளதாக புத்தளம் பொலிஸார் குறப்பிட்டனர்.

புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க