உள்நாட்டு செய்திகள்புதியவை

உண்மைக்கு புறம்பான தகவல் கொடுத்த நபர் கைது

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல் கொடுத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

119 எனும் அவசர காவல்துறை இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல் வெளியிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க