உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. துண்டு துண்டாகும்

நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டாக உடைந்து விடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மஹர பிரதேச மகளிர் அணிக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் உடன்பாடு இல்லை.

எந்தக் கட்சியில் யார் வேட்பாளராக வந்தாலும் தமக்கு அது சவாலாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க