உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினுடைய மாவட்ட இணைப்பதிகாரி க சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் புதுக்குடியிருப்பு பிரதேச உதவி பிரதேச செயலாளர் பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பிள்ளைகளில் கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களாக தெரிவு செய்யப்பட்ட 11 மாணவர்களுக்கு இந்த புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இதனூடாக அவர்களுடைய சேமிப்பு தொகைக்கு ஏற்ற வகையில் 5000 ரூபா முதல் 50000 ரூபா வரையான பணப்பரிசுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது இந்த மாணவர்களை குறித்த திடடத்தில் இணைத்த அதிகாரிகளும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க