உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் இன்று காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னைடுத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் நூற்றுக் கணக்கான உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பதாதைகளில் ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே’ ஒரு நாள் நிச்சையம் வெளி வரும், ‘சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை’ இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள், உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில் சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட மன்னார் நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து மகஜர் வாசிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் ஐ.நா சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க