உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பில் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று இரவு 08.00 மணிவரை இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மாறகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கும் கொட்டிகாவத்த, முல்லேரிய, பிரதேசங்களுக்கும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீடமைப்பு பிரதேசங்களுக்கும் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுகிறது.

கருத்து தெரிவிக்க