உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலதா மாளிகை பெரஹரவுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பொஸிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி நகரத்தை பல வலயங்களாக பிரித்து இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வு அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கும்பல் பெரஹர ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பெரகஹர தொடர்பான பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க