உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பொதிகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.

பொது இடங்களில் போதைப்பொருளை வீசி கொள்வனவாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் இடத்தை குறிப்பிட்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அவர், பதுளை, ஹாலிஎல, உடுவர ஆகிய இடங்களில் போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடுவர பகுதியில் வசிக்கும் 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 60 ஹெரோயின் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைபொருளின் பெறுமதி 2 இலட்சம் ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர்.

ஊவா பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி காவல்துறை மா அதிபர் ஜெகத் பலிககாரவின் ஆலோசனைக்கு அமைய பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க