உள்நாட்டு செய்திகள்புதியவை

மெத்தைகள் பறிமுதல்: விசாரணை அறிக்கை கோரப்பட்டது

அண்மையில் கைப்பற்றப்பட்ட மெத்தைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இங்கிலாந்து சரக்குக் கொள்கலன்கள் குறித்து விசாரணை நடத்த சுங்க திணைக்கள பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் செய்து அடுத்த வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த கொள்கலன்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்  என சுங்க செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட மெத்தைகளைக் கொண்ட 65 சரக்குக் கொள்கலன்களை பறிமுதல் செய்தது.

இதேவேளை குறித்த கொள்கலன்களைக் கோர எந்தவொரு தரப்பும் முன்வரவில்லை என்று சுங்கத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க