உள்நாட்டு செய்திகள்புதியவை

ருஹுனை பல்கலைக்கழக மோதல்: பாதுகாப்பு அதிகரிப்பு

மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களிடையே நேற்று ஏற்பட்ட மோதலில் (12 பேர் காயமடைந்த நிலையில் ருஹுனை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 10 மாணவர்கள், கல்விசாரா ஊழியர் ஒருவர், மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அடங்குவர், அவர்கள் தற்போது மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவம் காரணமாக பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க