உள்நாட்டு செய்திகள்புதியவை

முல்லைத்தீவு-முத்துவிநாயகபுரத்தில் வீடு தீக்கிரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக வீடு தீக்கிரை ஆகியுள்ளது

இதன் போது வீட்டில் இருந்து எந்தவித உடமைகளும் மீட்க முடியாத அளவில் அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன

இருப்பினும் உயிர்ச்சேதங்கள் காயங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறி உள்ளார்கள்

கருத்து தெரிவிக்க