வடக்கு செய்திகள்

மாங்குளம் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது

பாடசாலை முதல்வர் த.யோகானந்தராஜா தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினராக துணுக்காய் கல்வி வலயத்தில் உடைய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்த் மற்றும் துணுக்காய் கல்வி வலய கணக்காளர் மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் மற்றும் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் உடைய பிரதி அதிபர் பங்குதந்தை லெபோன் சுதன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் பரிசளிப்பு விழாவின் போது வகுப்பு ரீதியாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் , மாவட்ட, மாகாண மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் இதர செயற்பாடுகளுக்கான பரிசில்கள்  வழங்கப்பட்டன.

அத்தோடு பாடசாலையில் சேவை அடிப்படையில் பணியாற்றி வருகின்ற 3 ஆசிரியர்களுக்கான நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பாடசாலையில் விருந்தினர்களை கௌரவிக்கின்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன.

அந்த வகையில் இன்றைய மாங்குளம் மகாவித்தியாலயத்தின் உடைய பரிசளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவு பெற்று இருக்கின்றது.

கருத்து தெரிவிக்க