உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பில் வறட்சி: நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வரட்சி நிலவி வருவதால் அதிகமான குளங்கள் வற்றிவருகின்றன.

குளங்கள் வற்றுவதால் நன்னீர் மீன்பிடியாளர்கள் குளத்து மீன்களைப் பிடிப்பதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆரையம்பதி கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி கிரான் உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள குளங்களில் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளன.இதனால் மீனவர்கள் குளங்களுக்குள் இறங்கி மீன்படியில் ஈடுபடுகின்றனர்.

விரால் சுங்கான் பனையான் மீசைப்பனையான் உள்ளிட்ட குளத்து மீன்கள் பெருமளவில் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிடிக்கப்படும் விரால் மற்றும் சுங்கான் மீன்களை கருவாடாக மீனவர்கள் மாற்றிவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க