உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியது!

தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியிருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சில தொடருந்துகள் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும்,  அலுவலக தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தூர இடங்களுக்கான சேவைகளும், இரவு நேர தபால் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

இதனால், ஆசனங்களை ஒதுக்கிக் கொண்ட பயணிகளுக்கு உரிய பற்றுச்சீட்டுக்களை தொடருந்து நிலையங்களில் செலுத்தி, அதற்கான பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க