உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனை விவகாரம் – வெளிநாடுகளின் தலையீட்டை ஏற்க முடியாது

மரண தண்டனை விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டதையடுத்து சர்வதேச நாடுகள் சில எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை இலங்கை அரசாங்கம் சுயமாக நடைமுறைப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

எதற்காகவும் இந்த தீர்மானத்தில் மூக்கை நுழைப்பதற்கு வெளிநாடுகளுக்கு அதிகாரம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க