உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பாடசாலை போக்குவரத்து சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள தேசிய பாடசாலைகளை தவிர மாகாண பாடசாலைகளின் செயற்பாட்டு காலம் நீடிக்கப்படுவதை எதிர்த்து பாடசாலை போக்குவரத்து சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அம்பலங்கொட கல்வி வலய அலுவலகம் முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீர்மானத்தால் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று அகில இலங்கை இடை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத் தலைவர் ருவன் பிரசாத், இதன்போது கூறினார்.

இந்த தீர்மானத்தின் காரணமாக, தேசிய பாடசாலைகளின் மாணவர்கள் பிற்பகல் 1.30 முதல் 2.30 வரை கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

கருத்து தெரிவிக்க