உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில் மரமென்றின் அடிவாரத்தில் பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்தசில்வா தலைமையிலான குழுவினர் சுமார் 25ற்கு மேற்பட்ட நிலக்கன்னி வெடிகள் மற்றும் ஆ.பீ.ஜீ ரக வெடிகுண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஓமந்தைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க