இலங்கை

வட மாகாண மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ் நவாலித் தாக்குதலில் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக அவர்களை நினைவு கூர்ந்து வடமாகாணம் முழுவதுமாக இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் ஒளித்தீபம் ஏற்றப்படவுள்ளது.வலி. தென்மேற்கு உட்பட்ட நவாலி பொது அமைப்புக்கள், கல்லிமான்கள், குருமார்கள், மற்றும் நலன் விரும்பிகளின் கோரிக்கைக்கு அமைய அமைதியான முறையில் வீடுகளில் விளக்கேற்றி நினைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 1995 ஜுலை 9இல் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேரை நினைவு கூர்ந்தே ஒளித்தீபம் வீடுகளில் ஏற்றப்படவுள்ளது.மேலும் வழமைபோல் மாலை 4.30 மணிக்கு தேவாலயங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும்.

 

 

கருத்து தெரிவிக்க