விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ணம் – இக்கட்டான நிலையில் இலங்கை!

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் ரிவெர்சைட் மைதானத்தில் இலங்கை நேரம் பிற்பகல் 3 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும் தென்னாபிரிக்க அணிக்கு ஃபஃப் டூ பளஸிஸும் தலைமை தாங்கவுள்ளனர்.

உலகக் கிண்ணம் 2019ஆம் ஆண்டுக்கான சீசனில் இலங்கை அணி இதுவரை 6 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ள அதே நிலையில், 3 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி 9ஆவது இடத்தில் உள்ளது.

கருத்து தெரிவிக்க