உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மில்ஹானிடம் விசாரணைகள் தொடர்கின்றன. ஆயுதங்களும் மீட்பு

தேசிய தௌஹீத் ஜமா அமைப்பின் தலைவர் ஸஹ்ரானுக்கு பின்னர் தற்கொலை தாக்குதலை நடத்த தயாராக இருந்தார் என்று கூறப்பட்ட மொஹமட் மில்ஹானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதங்கள், காத்தான்குடி, ஒல்லிக்குளம் பகுதி வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் டி56 ரக துப்பாக்கிகள், ஜெலிக்நைட் குச்சிகள், டெட்டினேட்டர்கள் உட்பட்ட பல ஆயுதங்கள் அடங்குகின்றன.

மில்ஹான், சவூதியில் கைதுசெய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க