உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமெரிக்காவை எதிர்த்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மற்றும் வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து இரண்டு மாணவர் சங்கங்கள் இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

புரட்சிகர மாணவர் சங்கம் மற்றும் மாற்றத்திற்கான இளைஞர் மாணவர் சங்க உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் நடத்தைக்கு எதிராக பதாகைகள் ஏந்திய நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று இதன் போது எதிர்ப்பாளர்கள் கோசம் எழுப்பியுள்ளனர்.

இலங்கைக்கு இதேபோன்ற நிலை ஏற்படக்கூடும் என்று மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க