உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுப்பக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இலுப்பக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ. சூலியத்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் சிப்பி ஆற்றுப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட நிலையில் ஒரு தொகுதி சீவப்பட்ட பாலை மரக்குற்றிகளை மீட்டுள்ளதோடு,குறித்த உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பாலை மரக்குற்றிகள் இலுப்பக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கருத்து தெரிவிக்க