இலங்கை

முன்னாள் ஜனாதிபதியே விடுதலைப்புலிகளை வளர்த்தவர்! கருணா

சஜித் பிரேமதாச தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் தந்தையே விடுதலைப் புலிகளுக்கு 5,000 துவக்குகளும் 5,000 கைக்குண்டுகளும், ஒரு கோடி துப்பாக்கி ரவைகளையும் தந்து இயக்கத்தை வளர்த்தவர் ஆவார். 25 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே விடுதலைப் புலிகளுக்கு வழங்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவையில்லாமல் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்து தற்போது சஜித் பிரேமதாச சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாத நிலைமை காணப்படுகின்றது. மேலும், எனக்கு எதிரான கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க