உலகம்

மியன்மாரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162பேர் உயிரிழப்பு !

மியன்மார் நாட்டில் கச்சின் மாநிலத்தில் உள்ள ஹபாகந்த பகுதியில் மரகத சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலை வழமை போன்று, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப் பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து மூடியதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

இதில் சுமார்  50 தொழிலாளிகள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதோடு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சுரங்க நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 அதிகரித்து உள்ளதோடு, 54 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க