உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு வெளிநாட்டவர்களே பங்களிப்பு: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால அனைவருக்கும் பொருத்தமான வாழ்க்கைச் சூழலை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும். அனைவரினதும் ஆதரவு அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க