உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரயில் ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில் ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ரயில்வே திணைக்கள ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
நிலுவைச் சம்பளக் கொடுப்பனவுகளை உரியவாறு செலுத்துமாறு வலியுறுத்தியே இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜனக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க