இலங்கை

பாடசாலை மாணவர்களின் ஒகஸ்ட் மாத விடுமுறை ரத்து

பாடசாலைகள் மாணவர்களின் ஒகஸ்ட் மாத விடுமுறையை ரத்து செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 7ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புலமைப்பரிசில் பரீட்சைகளும் எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனவே, இரண்டாம் தவணைக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 29ம் திகதி முதல் பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க