இலங்கை

உலக கிண்ண சர்ச்சை; மீண்டும் கொந்தளித்துள்ள மஹேல

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனை டுவிட்டர் பதிவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்; “விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை” என மீண்டும் கொந்தளித்துள்ளார் மஹேல. இதுமட்டுமின்றி ஏற்கனவே தனத்தை டிவிட்டர் பக்கத்தில் “போட்டிக்கு காட்டிக் கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு கூறியுள்ள மஹேல ஜயவர்தன, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தேர்தல் சர்க்கஸ்” எனவும் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க