இலங்கை

கட்டுநாயக்கவில் இன்று அதிகாலை தரையிறங்கிய விசேட விமானம்

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளது. இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்களே இந்த விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். மடகஸ்கார், மொசம்பிக், உகண்டா, கென்யா, ருவன்டா, டென்சானியா ஆகிய நாடுகளில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்குச் சென்றிருந்தோரே, இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.மேலும் இவர்கள் தனிமைப்படுத்ல் நிலையங்களுக்கு அழைத்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க