புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு ஆட்சியாளர் ஷேக் முகமது தெரிவிப்பு!

டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகான புதிய திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது டுபாயில் உள்ள விமான நிலையத்ததை விட புதிதாக உலகின் மிக பெரிய விமான நிலையமாக 35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும்.

இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. சுமார் 260 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும்.

கருத்து தெரிவிக்க