புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் எரிமலை வெடிப்பு!!

நேற்று (17.04) இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்
ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11,000 ​பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. 2,378 அடி உயரமுள்ள Ruang எரிமலையில் இருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

மேலும், எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க