இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமம்!!

புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று (10.04) முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இன்று (11.04) காலையில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்காக 1,400 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை ஈடுபடுத்தியுள்ளதுடன், தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க