இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

சுமார் நான்கு கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்!!

நேற்று (05.03) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக, விலை நிர்ணயத்தை அடுத்த வாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்புவதற்கு
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சந்தையில் முட்டையின் விலை கட்டுப்பாடின்றி பாரிய அளவு அதிகரித்துள்ளமையால் எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு சாதாரண விலையில் முட்டையை வழங்குவதற்காக முட்டைக்கான உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க