உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மைத்திரியின் முடிவால் ஐ.தே.க. கடும் அதிருப்தி! பதவி துறக்கிறார் ருவன்?

ஊடகத்துறை அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான ருவன் விஜேவர்தன தீர்மானித்துள்ளார் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே ருவன் இந்த முடிவை எடுக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இதன்ஓர் அங்கமாகவே கடும் விமர்சனங்களுடன் ருவன் விஜேவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இராஜினாமா செய்யும் முடிவு குறித்து கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ருவான் தெரியப்படுத்தியுள்ளார் என்றும், மைத்திரியின் மேற்படி தீர்மானத்தால் ஐ.தே.க. உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் அறியமுடிகின்றது.

கருத்து தெரிவிக்க