உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரூபவாஹினியை கையகப்படுத்தினார் மைத்திரி!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உடன் அமுலுக்குவரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு எந்நேரத்திலும் விடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க