உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லாஹ் பல்கலைக்கழகம்- 4பில்லியனில் மீதமிருப்பது 36ஆயிரம்.

முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வின் சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து 4 பில்லியன் ரூபா வரை நிதியளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பதிவுகள் வங்கிக்கணக்கில் உள்ளன

எனினும் தற்போது அந்தக்கணக்கில் 36ஆயிரம் ரூபா மாத்திரமே இருப்பதாக நிதிமோசடி தொடர்பான காவல்துறையினர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்துக்காக 2016 ஆம் ஆண்டில் இருந்து 2019 மே வரை 4.44 பில்லியன் ரூபாய்; கிடைத்துள்ளது.

இந்த பணம் சுமார் 825 தடவைகளில் மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பணம் செலவழிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய தமக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினர் மன்றிடம் கோரிக்கை விடுத்தனர்.

கருத்து தெரிவிக்க