உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடற்கரையில் தேங்கும் கழிவு நீர்; பொதுமக்கள் அசௌகரியத்தில் !

கடற்கரையில் தேங்கும் கழிவு நீரால் அசளொகரியங்களை எதிர்நோக்குவதாக
பொதுமக்கள் தெரிவிக்கினறனர்.

திருகோணமலை நகரில் இருக்கும் கடற்கரையில் நகரின் வடிகான்கள் மூலம் வந்து
இறங்கும் கழிவு நீர் தேங்குவதனால் கடற்கரையை பயன்படுத்துவோர் பல
அசளொகரிங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலையில் உடற்பயிற்சி செய்வோர்,உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுளா பயணிகள், மாலையில் நேரம் செலவிடவருவோர்,ஒன்று கூடும் வயதானோர் மற்றும் சிருவர்களும் தொடர்ந்து
கடற்கரையை பாவிப்பதால் கழிவு நீர்தேக்கத்தால் பல இடைஞ்சல்களை எதிர்நோக்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இப்பிரச்சனையை திருகோணமலை நகராட்சி மன்றம் தீர்த்து தருமாறு அவர்கள் கோரி நிற்கின்றனர்

கருத்து தெரிவிக்க