உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தனது மகனை இழந்த மற்றுமொரு தாய் முல்லைத்தீவில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் பல்வேறு வகைகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களுடைய பிள்ளைகளை தேடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

வெயில், பனி, குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாது வீதியோரங்களில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை அரசாங்கத்திடம் தங்களுடைய உறவுகளை கேட்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் தங்களுடைய பிள்ளைகளுக்கான தீர்வு கோரி பல்வேறு வகையில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.

இவ்வாறு இன்றைய தினம்(24) 869 ஆவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது

அந்த வகையிலே காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த தனது மகனை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் மற்றுமொரு தாயார்  இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர்

இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலை திரேசம்பாள் என்ற தாயார் ஆவார்.

இவருடைய இழப்புக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கின்றது.

கருத்து தெரிவிக்க