உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி மாயம்!

களுத்தறை சாந்த்த செபஸ்தியன் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.

குறித்த மாணவன் நேற்று மாலை 3.30 மணியளவில் நண்பர்களுடன் நீராட சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்தறை-கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மதுரகே சசிது மல்ஷான் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க